Header Ads Widget

Pop Ads

The End of the Experiment and the Mystery behind it.

 வீரப்பனும் அவனது கூட்டாளிகளும் விஷம் வைத்து கொல்லப்படவில்லை என்று "ரசாயன பரிசோதனை ஆய்வில் கூறப்பட்டுள்ளது".

'விஷம் வைத்து கொல்லப்படவில்லை' 

               கடந்த ஆண்டு அக்டோபர் 18ம் தேதி வீரப்பனும் அவனது கூட்டாளிகளும் தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே மலைக்கிராமத்தில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டனர்.

               வீரப்பன் கும்பலுடன் நடந்த மோதலில் அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக அதிரடிப்படை கூறியது.

              ஆனால், வீரப்பனும், அவனது கூட்டாளிகளும் மயக்க மருந்து கொடுத்து பிடிக்கப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டும், பின்னர் விஷம்கொடுத்துக் கொல்லப்பட்டதாக


            உண்மை கண்டறியும் குழுவினரும் வீரப்பனின் மனைவி  கூறுகின்றனர்.

            இந்நிலையில் வீரப்பன் விஷம் வைத்துக் கொல்லப்படவில்லை என்று ரசாயன பரிசோதனையில் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.

           வீரப்பன் உயிருடன் இருக்கும்போதே அவனது உடலில் துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்துள்ளதாகவும், அதன் காரணமாகவே அவனும்,கூட்டாளிகளும் இறந்துள்ளதாக, தடயவியல் பிரிவின் ரசாயனப் பரிசோதனை முடிவுகள் தெரிவிக்கின்றன.

  
   இதை தொடர்ந்து... 
             வீரப்பன் மற்றும் கூட்டாளிகளின் உடலிலிருந்து எடுக்கப்பட்ட குண்டுகள், குடல் பகுதி ஆகியவற்றில் நடந்த ரசாயனப் பசோதனையில் வீரப்பன் விஷம் வைத்துக் கொல்லப்படவில்லை
என முடிவுகள் தெரியவந்துள்ளன.

பரிசோதனையின் முடிவு மற்றும் அதன் பின்னால் உள்ள மர்மம்.

             வீரப்பன் உயிருடன் இருந்த  காலத்தில் பொய்யாக வெளியான செய்திகள் பல அதேபோல் அவர் இறந்த பிறகும் நிறைய உண்மைகள் மறைக்கப்பட்டு வெளியாகின, இதில் ஒன்று வீரப்பன் மரணம். 

           வீரப்பன் மரணம் குறித்த மர்மம் இன்னும் விலக்காமல் உள்ளது.
 
           வீரப்பன் எப்படி இறந்தார் என்ற கேள்விக்கு பதில் இல்லாமல் இன்னும் தெரியாமல் உள்ளது.

இது பற்றிய உங்கள் கருத்து பதிவிடவும்.......

கருத்துரையிடுக

0 கருத்துகள்